புதிய செய்திகள் மற்றும் நிகழ்வுகள்

தோட்டத் தொழிலாளர்கள் 1 வாரத்திற்குள் இறுதி செய்யப்பட வேண்டிய தினஊதியம் ரூ.1000/-ஐப் பெறவேண்டும்.

ஊடகங்கள்

2021 வரவு செலவுத் திட்டத்தின் முன்மொழிவுகளின்படி, தோட்டத் தொழிலாளர்கள் ரூ.1000/= தினக்கூலி யைப் பெறுவதற்கான இறுதி முடிவு மேலும் ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று தொழிற்சங்கத் தலைவர்கள் மற்றும் பிளாண்டர்ஸ் அசோசியேஷனின் பிரதிநிதிகளுடன் நடத்தப்பட்ட விவாதங்களைகருத்தில் கொண்டு, தினக்கூலி அதிகரிப்பு தொடர்பாக, இறுதி முடிவை எடுப்பதற்கு முன்னர் இரு தரப்பினரும் அளித்த உண்மைகளைப் பற்றி விவாதிக்க முடிவு செய்யப்பட்டது.

தோட்டத் தொழிலாளர்களும் தொழிற்சங்கத் தலைவர்களும் குறைந்தபட்ச தினக்கூலி ரூ.1000/-ஆக அதிகரிக்கப்பட வேண்டும் என்று கூறியபோதிலும், தொழிலாளர்கள் தினமும் கூடுதலாக 2 கிலோ இலைகளை வழங்க வேண்டும் என்று பிளாண்டர்ஸ் அசோசியேஷன் கோரி வருகிறது. மேலும், தொழிலாளர்களின் பணிக்கொடை தொடர்பாக, அதற்கேற்ப அவர்களுக்கு திருப்திகரமான சேவை வழங்கப்படவில்லை என்றும், இதன் விளைவாக, ஒரு தொழிலாளி வேலை செய்யும் நாட்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 180 கட்டாய நாட்களாக இருக்க வேண்டும் என்று பிளாண்டர்ஸ் அசோசியேஷன் பரிந்துரைத்தது என்றும் அவர்கள் கூறினர். சங்கத்தின் இந்த ஆலோசனைகளை நான் ஏற்றுக்கொண்டேன், இது தினமும் 1கிலோ கூடுதல் இலைகள் மற்றும் வருடத்திற்கு 180 கட்டாய நாட்கள்.

எவ்வாறாயினும், தோட்டத் தொழிலாளர்களின் தினக்கூலியை ரூ.1000/-ஆக உயர்த்தும் அரசாங்கத்தின் பிரேரணையை முன்னெடுப்பதும், ரூபா 1000/= செலுத்தத் தவறும் எந்தவொரு நிறுவனத்தையும் அரசாங்கத்திடம் ஒப்படைப்பதும் எனது முடிவாகும். மேலும், அரசாங்க மேற்பார்வையின் கீழ் அல்லது வேறு எந்த நிர்வாகத்தின் கீழும் இந்த தோட்டத்தை பராமரிப்பதற்கான தயாரிப்புகளை அரசாங்கம் செய்துள்ளது என்று நான் அறிவித்தேன்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் ஜே.தோந்தர்மன், பாராளுமன்ற உறுப்பினர் வடிவேலு சுரேஷ், தோட்டக்காரர் சங்கத்தின் பணிப்பாளர் நாயகம் திரு.கனிஷ்கா வீரசிங்க, அமைச்சர் செயலாளர் -திரு.மாபா பத்திரன, தொழிலாளர் ஆணையாளர் நாயகம் சட்டமா அதிபர் திரு.பிரபாத் சந்திரகீர்த்தி தொழிற்சங்கத் தலைவர்கள், பிரதான நிறைவேற்று அதிகாரிகள் மற்றும் தனிச் செயலாளர் சட்டத்தரணி அகில கயான் கௌசல்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.